×

தி.மலை அருகே டாஸ்மாக் கடை ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடிக்க முயற்சி!

திருவண்ணாமலை: செங்கம் அருகே டாஸ்மாக் கடை ஊழியர்கள் 2 பேரை துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு போலீசார் வலைவீசி உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள பெருமுட்டம் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. மறுநாள் குடியரசு தின விடுமுறை என்பதால் விற்பனையான 3 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு மேற்பாவையாளர் சண்முகம்(40), விற்பனையாளர் லட்சுமணன்(42) ஆகியோர் இரவில் கடையை மூடியுள்ளனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்தவாறு வந்த 2 பேர், தாங்கள் வைத்திருந்த கைதுப்பாக்கியை எடுத்து வாகனத்தை நோக்கி சுட்டு பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மேற்பாவையாளர் சண்முகம் பணத்துடன் ஓட முயன்றபோது அவரது வலது காலில் துப்பாக்கியால் சுட்டனர். எனினும் பணத்துடன் அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அப்போது, விற்பனையாளர் லட்சுமணனை மடக்கி பிடித்த மர்ம நபர்கள், அவரை சராமாரியாக தாக்கியதுடன் மூடிய டாஸ்மாக் கடையை திறக்க வைத்துள்ளனர். கடைக்குள் பணம் இல்லாததால் லட்சுமணனை விட்டுவிட்டு அந்த மர்மநபர்கள் தப்பியோடியுள்ளனர். காயமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் போலீசார், அங்கிருந்த தோட்டாக்களை கைப்பற்றியுள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். போலீசார் தேடி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tashmak ,shop workers ,Thalai , Tiruvannamalai, perumuttam, TASMAC, fire, robbery
× RELATED அமாவாசையை முன்னிட்டு டாஸ்மாக்...